Tuesday, April 28, 2015

திருமுருகாற்றுப் படை வெண்பாக்கள் (Raaga Malika)




குன்றம் எறிந்ததுவும் குன்றப் போர் செய்ததுவும் 
அன்றங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக் 
கைவிடா நின்றதுவும் கல் பொதும்பில் காத்ததுவும் 
மெய் விடா வீரன் கை வேல் 


வீர வேல் தாரை வேல் விண்ணோர் சிறை மீட்ட 
தீர வேல் செவ்வேள் திருக் கைவேல் - வாரி 
குளித்த வேல் கொற்ற வேல் சூர் மார்பும் குன்றும் 
துளைத்த வேல் உண்டே துணை 


உன்னை ஒழிய ஒருவரையும்  நம்புகிலேன் 
பின்னை ஒருவரை யான் பின் செல்லேன் - பன்னிருகைக் 
கோலப்பா வானோர் கொடிய வினை தீர்த்தருளும் 
வேலப்பா செந்தி வாழ்வே 


அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் 
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் 
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 
முருகா என்று ஓதுவார் முன் 


முருகனே செந்தி முதல்வனே மாயோன் 
மருகனே ஈசன் மகனே - ஒருகை முகன் 
தம்பியே நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் 
நம்பியே கைத் தொழுவேன் நான் 


பரங்குன்றின் பன்னிரு கைக் கோமான் தன பாதம் 
கரம் கூப்பிக் கண் குளிரக் கண்டு - சுருங்காமல் 
ஆசையாய் நெஞ்சே அணி முருகாற்றுப் படையைப் 
பூசையாக் கொண்டே புகல் 


நக்கீரர் தாம் உரைத்த நன் முருகாற்றுப் படையைத் 
தற்கோல நாள் தோறும் சாற்றினால் - முற்கோல 
மா முருகன் வந்து மனக் கவலை தீர்த்தருளித் 
தான் நினைத்த தெல்லாம் தரும் 




No comments:

Post a Comment